குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் சிசு மரணம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற உலகத் தாய்ப்பால் வார விழாவில் அவர் பேசியது: பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்கும் தாய்ப்பால் அவசியம். குறிப்பாக, எடை குறைந்த குழந்தைகள் மற்றும் குறை மாதக் குழந்தைகளை காக்கும் மருந்து தாய்பால் மட்டுமே. தாய்ப்பால் வங்கிக்கு தாய்ப்பால் வழங்கும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு மட்டுமின்றி, அனைத்து குழந்தைகளுக்கும் தாயாக திகழ்கிறார்கள்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கிக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தாய்ப்பாலை சேமித்து வைத்து பயன்படுத்த தேவையான உறைநிலை குளிர்பதன கருவி, கிருமி நீக்கும் கருவி, தாய்ப்பால் எடுக்கும் கருவி, குளிர் சாதனப்பெட்டி போன்ற அனைத்து நவீன கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. தாய் பால் வங்கியில் 3 மாதங்கள் வரை தாய்பாலை சேமித்து வைக்க முடியும். குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்பால் மட்டுமே கொடுத்தால் சிசு மரணம் என்பது இருக்காது என்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி, நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி முன்னிலை வகித்தார். விழாவில் தாய்ப்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர், சிறப்பாக பணியாற்றிய செவிலியர் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வே தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பல்!

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


