முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

பழனிக்கோயில் சார்பில் சுதந்திர தின அன்னதான பொது விருந்து

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில்  சுதந்திர தினவிழாவையொட்டி  புதன்கிழமை அன்னதான பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில்  சுதந்திர தினவிழாவையொட்டி  புதன்கிழமை அன்னதான பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. 
 அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், சிறப்பு பூஜை, இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை, பாயாசம், மூன்று வகை பொறியல், அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
 பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி என்.எஸ்.எஸ். என்.சி.சி., மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டனர். 
 பின்னர், ஆதரவற்ற முதியோர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி., விவேகானந்தன், சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, திருப்பூர் லாட்ஜ் மகேஷ், அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.