பழனி மலைக்கோயிலில் கமாண்டோ வீரர்கள் ஆய்வு

பழனி மலைக்கோயிலில் சென்னை கமாண்டோ படை வீரர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
Updated on
1 min read

பழனி மலைக்கோயிலில் சென்னை கமாண்டோ படை வீரர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 தமிழக திருக்கோயில்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை கமாண்டோ படை வீரர்கள் திருக்கோயில்கள் தோறும் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கும் சென்று வந்த இந்த வீரர்கள் புதன்கிழமை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனர். கோயிலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட வீரர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு கிளம்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com