தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கொடைக்கானல் அருகே காயத்துடன் கடமான் மீட்பு

கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட கடமானை வனத்துறையினர் மீட்டு வனப் பகுதிக்குள் திங்கள்கிழமை விட்டனர்.

News image
Updated On :14 மே 2018, 7:06 pm

DIN

கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட கடமானை வனத்துறையினர் மீட்டு வனப் பகுதிக்குள் திங்கள்கிழமை விட்டனர்.
செண்பகனூர் பைரவர் கோயில் பகுதியிலுள்ள புதரில் இருந்த இந்த கடமானை பார்த்த சிலர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த கடமான் காயங்களுடன் இருப்பதை பார்த்து அதை மீட்டு அதற்கு உணவு வழங்கி அப்பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் விட்டனர்.
இதுகுறித்து ரேஞ்சர் ஆனந்த் கூறியதாவது: உணவு தேடி வந்த இக்கடமான் தவறி விழுந்ததில் லேசான காயமடைந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் மானை மீட்டு வனப் பகுதிக்குள் விட்டனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.