ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலைக்காக மேம்பாலம் கட்டும் பணி தொடக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழியாக பழனி,திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் எதிரே காய்கறி சந்தை உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மூலம் ரூ.159 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த டிசம்பர் 7 இல் தொடங்கப்பட்டது.
அதன்படி, லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை, காளாஞ்சிப்பட்டி, ஒட்டன்சத்திரம், அரசப்பிள்ளைபட்டி வழியாக 10.1 கி.மீ. தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதில், 2 ரயில்வே மேம்பாலங்கள், வேடசந்தூர் சாலை, தாராபுரம் சாலையை கடக்க இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக வேடசந்தூர் சாலையில் காளாஞ்சிபட்டி அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இப்பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் தோ் திருவிழா

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
