கொடைக்கானலில் மழை குறைந்ததால், அங்குள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை படகு சவாரி மீண்டும் தொடங்கியது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்ததால் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. மேலும் கடந்த 3 நாள்களாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது . இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் முற்றிலுமாக மழை நின்றதையடுத்து கொடைக்கானல் ஏரியில் மீண்டும் படகு சேவை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைக்கதிர்

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


