பழனியை அடுத்த அ.கலையமுத்தூர் வாய்க்காலை விவசாயிகளே சொந்த செலவில் ஞாயிற்றுக்கிழமை தூர் வாரினர்.
பழனி அருகே அ. கலையமுத்தூர் கிராமத்தில் உள்ளது ராஜ வாய்க்கால். சுமார் 900 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன்மூலம் பயன்பெறுகிறது. இவற்றில் தற்போது விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலாறு அணையில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் ராஜவாய்க்காலில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படாமல் செடிகள் முளைத்த நிலையில் உள்ளது. பழனி பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட பல பணியிடங்களும் காலியாக இருப்பதால் தூர்வாரும் பணிகள் சுணக்கமடைந்துள்ளன. இதையடுத்து ராஜவாய்க்காலை தூர் வாரி தண்ணீர் தடையில்லாமல் செல்லும் வகையில் விவசாயிகள் தாங்களாகவே ஒன்றிணைந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் தற்போது வாய்க்கால் தூர் வாரப் பட்டால் மட்டுமே இந்த ஆண்டு விவசாயம் செய்ய முடியும் என்பதால் தாங்களே பொக்லைன் இயந்திரங்களை வைத்து இப்பணிகளை செய்வதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சிஎன்ஜி விலை மீண்டும் உயர்வு: ஒரே வாரத்தில் இரண்டாவது முறை

தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்

எரிபொருள் தட்டுப்பாடு: ரயிலில் சென்ற ராஜஸ்தான் துணை முதல்வர்!

கண்ணுங்களா... செல்லங்களா... விடியோ வெளியிட்ட சூர்யா!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
