வேடசந்தூரில் மனைவியைக் கொலை செய்து விட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிவநேசன் (45). இவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் உமாதேவி (40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்த உமாதேவி மர்மமான முறையில் உயிரிழந்தார். உமாதேவிக்கு வலிப்பு ஏற்பட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக, கணவர் சிவநேசன் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே நேரத்தில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சுந்தரமூர்த்தி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் உமாதேவி கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து,
சிவநேசனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!

திருவண்ணாமலையில் தூய்மைப் பணிகள்: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் ‘டிரா’

ஆனைமங்கலம் செப்பேடுகளை தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு தமிழக எம்பி கடிதம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
