இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் பாதாளச் சாக்கடை கட்டுமான வசதி

Updated On :25 பிப்ரவரி 2019, 7:33 am IST

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் பாதாளச் சாக்கடை கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டு, மாநகராட்சியின் பாதாளச்சாக்கடை கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கப்பட உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என நாள்தோறும்  4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெறுகின்றனர். இந்நிலையில் ரூ.18 கோடி செலவில் தாய் சேய் நல சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகள்  நடைபெற்று வருகின்றன. 5 தளங்களாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்திற்கான  திட்ட  மதிப்பீட்டுத் தொகையில்,  மருத்துவமனையிலுள்ள கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான திட்டம் இணைக்கப்பட்டது. 
இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கு மாற்றாக, திண்டுக்கல் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடையுடன் இணைத்து வெளியேற்றும் வகையில் அந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, மருத்துவமனை வளாகத்தில் 29 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை, பாதாளச் சாக்கடைத் திட்டத்துடன் இணைத்து வெளியேற்றுவதற்கான பணிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதாளச் சாக்கடைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ரூ.50 லட்சத்திற்கான நிதியையும் மாநகராட்சிக்கு, பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியது: ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த நிதியிலிருந்து கழிவுநீர் சுத்திகரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.50 லட்சத்திற்கான நிதி, திண்டுக்கல் மாநகராட்சியின் பாதாளச்சாக்கடை தனி அலுவலக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், மருத்துவமனை வளாகத்தில் 29 இடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாளச்சாக்கடை மூலம் முற்றிலுமாக வெளியேற்றப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.