குஜிலியம்பாறை அருகே செவ்வாய்க்கிழமை தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பதாகக் கூறி சாலை அமைக்கும் ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் கேவிலூர் அருகே உள்ள ஆர்.கோம்பையிலிருந்து கரையானூர் வரையிலான 1.700 கி.மீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி ரூ.34 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.
இந்த பாதையை பாரதிநகர், அண்ணாவி நகர், தாதனூர், கரையானூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கரையானூரிலிருந்து கோம்பை நோக்கி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 500 மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமமுக பிரமுகர் தர்மர் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் பாலு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தரமான சாலை அமைக்கப்படும் என்றும், அலுவலர்கள் முன்னிலையில் அந்த பணிகள் நடைபெறும் என்றும் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

