தமிழ்நாடு
இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 செய்திகள் - நேரலை!
தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர்பான முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
தனித் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாடு அரசுக்கு நியாயமான வரிப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேக்கேதாட்டு அணையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? விவரித்த சௌமியா அன்புமணி
3 வனவிலங்கு சரணாலயங்கள், 12,500 ஏக்கர் காடுகள், 700 ஆண்டுகள் பழைமையான நீர்மருந்து மரங்கள் என பலவற்றை அழித்துவிட்டுத்தான் மேக்கேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டவுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்: சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி
மாணவர்கள் மீது தடியடி! அமித் ஷா பதிலளிக்க ஒத்திவைப்பு தீர்மானம்கோரி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்
தில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம்கோரி மக்களவை பொதுச் செயலாளருக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.
நிர்மல் குமார் கேள்வி
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்துகொள்வார்களா என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இபிஎஸ் பேச்சு
கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை என்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அவமானப்படவும் தயார்
தமிழ்நாடு மக்களுக்காக அவமானப்படவும் தயாராக இருந்ததால்தான் பெங்களூர் பயணத்தை திட்டமிட்டேன் என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
கவன ஈர்ப்புத் தீர்மானம்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன்? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!

மேக்கேதாட்டு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தல்

மேக்கேதாட்டு திட்டத்தை கைவிட கா்நாடக காங்கிரசை வலியுறுத்த முடியாது: மாணிக்கம் தாகூா்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


