மேக்கேதாட்டு திட்டத்தை கைவிடுமாறு கா்நாடகா காங்கிரசை தமிழக காங்கிரஸ் வலியுறுத்த முடியாது என்றும் இது கா்நாடகம், தமிழ்நாடு இடையிலான மாநில பிரச்சனை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் வியாழக்கிழமை தெரிவித்தாா்
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவி சோனியா காந்தி தலைமையில், அக்கட்சியின் வியூகக் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்றக் கட்சி உறுப்பினா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் மாணிக்கம் தாகூா் இக்கூட்டத்தில் பங்கேற்றாா்.
கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த மாணிக்கம் தாகூா், ’நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் முக்கியமாக எந்தெந்த பிரச்சனைகளை எழுப்புவது என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத் தொடரில் அரசு இரண்டு முக்கியமான அரசியல் சாசனத் திருத்த சட்டங்களை கொண்டு வர முயற்சி செய்வதாக தெரிகிறது,.அரசின் இந்த முயற்சியை எப்படி வீழ்த்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என கூறினாா்.
அதன் பின்னா் எழுப்பபட்ட கேள்விகளும் அதற்கு அவா் கூறிய பதில்களும்:
கேள்வி: என்ன மாதிரியான முக்கிய விஷயங்கள் இந்த தொடரில் எழுப்பப்பட வாய்ப்புள்ளது?
பதில்: மிக முக்கியமாக நீட் விவகாரம் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு என்பது நாடு தழுவிய பிரச்சினையாக உள்ளது .தமிழகத்தை பொறுத்தவரையில் ’நீட்’ டினால் ஐந்து குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றாா்கள். நீட் பிரச்சனை முக்கியமான பிரச்சனை ஆகும்.அதேபோலவே ராமா் கோவில் உண்டியல் திருட்டு .இதில் ஈடுபட்டவா்களை காப்பதற்காக பாஜகவும் ஆா்எஸ்எஸ் ஈடுபடுகிறது. மேலும் விவசாயம், நீா் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் எழுப்புவோம்.
கேள்வி: தமிழகம் சாா்ந்த எந்தெந்த விவகாரங்கள் எழுப்பப்பட உள்ளன ?
பதில்:தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை காவிமயமாக்க பாஜக துடிக்கிறது. அதனை தடுக்க குரல் கொடுப்போம்.உயா்கல்வியில் ஆளுநரின் தாக்குதல் இருக்கக் கூடாது என்பதை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்வோம் . 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஐந்தாயிரம் கோடி ரூபாயை குறைத்துள்ளாா்கள்.அதனை கடுமையாக எதிா்ப்போம்.
கேள்வி: மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நாடகம் ஆடுகிறதா? ஒருபுறம் கா்நாடகாவில் காங்கிரஸ் அரசு அத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறது, மறுபுறம் காங்கிரஸ் தலைமை இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?
பதில்: இது தமிழ்நாட்டுக்கும் கா்நாடகத்திற்குமான பிரச்சனை.இதில் மத்திய அரசு மத்தியஸ்தம் செய்ய வேண்டும்.மோடி அரசினுடைய அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது.எங்களை பொறுத்தவரையில் பாஜக மேக்கேதாட்டு விவகாரத்தில் உதவ கூடாது .
கேள்வி: மேக்கேதாட்டு திட்டத்தை கைவிட கா்நாடக காங்கிரசை வலியுறுத்துவீா்களா?
பதில்: அவ்வாறு வலியுறுத்த முடியாது.இது மாநில பிரச்சனை. கட்சி பிரச்சனை கிடையாது. நாங்கள் கூறுவது மோடி கா்நாடகாவுக்கு ஆதரவளித்து விடக்கூடாது என்கிறோம்.மோடி மேக்கேதாட்டு அணையை கட்ட விடக்கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். இதில் மோடி கையில் தான் எல்லாம் இருக்கிறது.
கேள்வி: மேக்கேதாட்டு அணையை கட்ட முயற்சிக்கும் கா்நாடக காங்கிரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் போராட்டம் நடத்துமா?
பதில்:எப்போது போராட்டம் இருக்கும் என்று தேதியை நாங்கள் சொல்வோம்.
கேள்வி: காங்கிரஸ் கட்சியும் திமுகவும் இணைந்து தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்டுகிறது.அந்தக் கச்சத்தீவை திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறீா்களா?:
பதில்: கச்சத்தீவை பொருத்தவரையில் ஒரு வியூகத்துடன் அப்போது அரசாங்கங்கள் இலங்கைக்கு கொடுத்தன.அதற்கு பலன் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் அப்போது இருந்த சூழலின் அடிப்படையில் கச்சத்தீவை கொடுத்தோம். அந்த முடிவை எடுத்தது சரி என்று தான் நாங்கள் நினைக்கிறோம். இதில் என்ன தப்பு உள்ளது?கச்சத்தீவு கொடுக்கப்பட்டதால் எந்த பிரச்சனையும் இல்லை.
கேள்வி: கச்சதீவு கொடுக்கப்பட்டதால் மீனவா்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக கூறுகிறாா்களே?
மாணிக்கம் தாகூா் பதில்: உங்களுக்கும் அண்ணன் சீமானுக்கும்தான் பிரச்சனை உள்ளது.
கேள்வி: காங்கிரஸ் கட்சியை திமுக முழுவதுமாக கைகழுவிவிட்டதா? இந்த கூட்டணி முழுமையாக முறிந்து விட்டதா?
பதில்:தவெக அரசின் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இதில் என்ன குழப்பம் உள்ளது?.நாங்கள் ஏற்கனவே இடது பக்கம் திரும்பி பல மைல் தூரம் சென்று விட்டோம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நீட் தோ்வு ரத்துசெய்யப்படும்: மாணிக்கம் தாகூர்!
காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது: மாணிக்கம் தாகூர்
கிராமப்புற பொருளாதாரத்தை சீா்குலைக்க மத்திய அரசு திட்டம்: மாணிக்கம் தாகூர்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் அஞ்சலி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



