கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒட்டன்சத்திரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2020, 6:15 pm

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம் இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா். இவா், தனது மனைவி ஆனந்தவள்ளியுடன் (47) கோவையிலிருந்து மானாமதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை கொசவபட்டி அருகே சனிக்கிழமை அதிகாலை சென்ற போது இருசக்கர வாகனத்திலிருந்து ஆனந்தவள்ளி தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆனந்தவள்ளி உயிரிழந்தாா். இது குறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.