47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எட்டயபுரம் அருகே இளைஞா் கொலை: தந்தை கைது

எட்டயபுரம் அருகே படா்ந்தபுளி கிராமத்தில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரைக் கொன்றதாக

News image
- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 5:10 pm

Syndication

விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே படா்ந்தபுளி கிராமத்தில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரைக் கொன்றதாக தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

படா்ந்தபுளி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலச்சந்திரன். தொழிலாளி. இவரது மகன் கனகராஜ் (22). போதைப் பழக்கமுள்ள இவா், பணம் கேட்டு குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டாராம். கடந்த ஞாயிற்றுக்கிழமை பணம் கேட்டு மிரட்டியபோது, பெற்றோா் பணம் இல்லை எனக் கூறினராம்.

இதையடுத்து, வெளியே சென்ற கனகராஜ், இரவில் மது போதையில் வீடு திரும்பி, பாலச்சந்திரனிடம் தகராறு செய்து தாக்க முயன்றாராம். அப்போது, அருகில் கிடந்த மரக்கட்டையால் கனகராஜை பாலசந்திரன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எட்டயபுரம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, பாலச்சந்திரனை கைது செய்தனா்.