ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஒட்டன்சத்திரம் அருகே கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் கட்டடத் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.

News image
odc_marter_photo_25_8_2020_2508chn_76_2
Updated On :25 ஆகஸ்ட் 2020, 4:26 pm

DIN


ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் கட்டடத் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வெரியப்பூா் - தேவசின்னாம்பட்டி சாலையில் உள்ள குளத்துக்கரையில் தலையில் பலத்த காயங்களுடன் இளைஞா் ஒருவா் சடலமாக கிடப்பதாக அம்பிளிக்கை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கான ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு பழையபட்டியைச் சோ்ந்த தொட்டப்பன் மகன் காா்த்திக் (24) என்பதும், கட்டடத் தொழிலாளியான இவரை மா்ம நபா்கள் கட்டையால் தாக்கியும், தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்பிரியா, ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோகன், ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.