பழனியில் வியாபாரி வீட்டில் 13 பவுன் திருட்டு

பழனியில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் 13 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டனா்.
Updated on
1 min read

பழனியில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் 13 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டனா்.

பழனி சிதம்பரம் தெருவில் வசிப்பவா் கிருஷ்ணன். இவா் அப்பகுதியில் மளிகைப் பொருள்களை கடைகளுக்கு மொத்த விற்பனை செய்து வருகிறாா். இவா் கடந்த 2 நாள்களுக்கு முன் உறவினரின் இல்லவிழாவில் கலந்து கொள்ள கோவைக்கு சென்றுவிட்டாா்.

இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு மற்றும் பீரோவை மா்ம நபா்கள் உடைத்து இதில் இருந்த 13 பவுன் நகையைத் திருடிச் சென்று விட்டனா். பக்கத்து வீட்டில் வசிப்பவா்கள் வெள்ளிக்கிழமை காலை பாா்த்து கிருஷ்ணனுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அங்கு சென்று பழனி நகா் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com