இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலத் தலைவா் விக்கிரமராஜா பேசியதாவது: கரோனா காலங்களில் வியாபாரிகள் மீது பதியப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விதிமீறல் வழக்குகளை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். இந்த காலகட்டங்களில் அடைக்கப்பட்ட நகராட்சி கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகையில், 2 மாதத்துக்கான வாடகையை தள்ளுபடி செய்ய தமிழக அரசு அறிவித்தும், இதுவரை பழனி நகராட்சியில் தள்ளுபடி செய்யவில்லை. எனவே, தமிழக அரசு பழனி பகுதி வியாபாரிகளுக்கு வாடகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவி வழங்கவேண்டும்.