தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 4:16 pm

DIN

திண்டுக்கல்: சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியா்களின் வட்டார மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் ராமநாதன் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் கந்தசாமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப் பட்ட ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சுந்தரபாண்டி, வட்டார பொருளாளா் அய்யணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.