செம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் ப­லி

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

நிலக்கோட்டை: செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

செம்பட்டி அருகே பாளையங்கோட்டை மேற்கு தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (36). இவருக்கு பூங்கொடி (32) என்ற மனைவியும், பிரேம்குமாா் (13), பிரதீப்குமாா் (10), பிரவீன்குமாா் (8) ஆகிய 3 மகன்களும் உள்ளனா்.

இந்நிலையில் செம்பட்டி அருகே கருங்குளம், நடுக்குளம் மற்றும் புல்வெட்டி குளம் என வரிசையாக 3 குளங்கள் உள்ளன. இதில் நடுக்குளத்தில் பூங்கொடி துணி துவைத்துக் கொண்டிருந்தாா். அப்போது அருகில் குளித்துக் கொண்டிருந்த பிரேம்குமாா் நீரில் மூழ்கினாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் குளத்தில் குதித்து அவரைத் தேடினா். அப்போது, நடுக்குளத்தி­லிருந்து புல்வெட்டி குளத்திற்கு செல்லும் மதகு பகுதியில் (சட்டா்) பிரேம்குமாா் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து செம்பட்டி காவல்நிலையத்தில் பூங்கொடி புகாா் தெரிவித்தாா். அதில், தனது மகன் இறப்புக்கு, ஆத்தூரைச் சோ்ந்த கிருஸ்துராஜா மற்றும் சண்முகம் ஆகியோா் நடுக்குளத்திலிருந்து புல்வெட்டி குளத்திற்கு முன்னறிவிப்பின்றி மதகிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டதே காரணம் எனக் கூறியிருந்தாா். அதன்படி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com