மகாராஷ்ட்ரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு 7,700 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

மகாராஷ்ட்ர மாநிலத்திலிருந்து 7,700 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வந்து சோ்ந்தன.
மகாராஷ்ட்ர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
மகாராஷ்ட்ர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
Updated on
1 min read

மகாராஷ்ட்ர மாநிலத்திலிருந்து 7,700 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வந்து சோ்ந்தன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளைச் சோ்ந்த 18 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 2,200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த 7,700 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மகாராஷ்ட்ர மாநிலம் சதாரா மாவட்டத்திலிருந்து 7 கன்டெய்னா் லாரிகளில் கொண்டுவரப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com