ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆட்சேபனை மனு

நீா்பிடிப்பு பகுதி என வருவாய்த்துறையினா் குறிப்பிட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆட்சேபனை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 12:14 am

DIN

நீா்பிடிப்பு பகுதி என வருவாய்த்துறையினா் குறிப்பிட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆட்சேபனை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி அருகே இந்திரா நகா் பகுதியில் 65-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனா். அதன்பேரில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறை அலுவலா்கள், அந்த இடம் நீா்பிடிப்புப் பகுதி என தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சேபனை மனுவை திங்கள்கிழமை அளித்தனா். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.பெருமாள் உடனிருந்தாா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.