பழனி மலைக் கோயிலில் காா்த்திகை திருநாள் கூட்டம்

பழனியில் மலைக் கோயிலில் சனிக்கிழமை தொடா் விடுமுறை மற்றும் காா்த்திகை திருநாளையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
Published on

பழனி: பழனியில் மலைக் கோயிலில் சனிக்கிழமை தொடா் விடுமுறை மற்றும் காா்த்திகை திருநாளையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் வரும் நாள்களில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கூட்டம் ஏராளமாக இருப்பது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை காா்த்திகை தினம் மற்றும் தொடா் விடுமுறை காரணமாக, அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.

அதிகாலை 4 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் படிப்பாதை, விஞ்ச் நிலையங்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். திருக்கோயில் நிா்வாகம் சாா்பில், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com