ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை திருநாள் கூட்டம்

பழனியில் மலைக் கோயிலில் சனிக்கிழமை தொடா் விடுமுறை மற்றும் காா்த்திகை திருநாளையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 11:21 pm

DIN

பழனி: பழனியில் மலைக் கோயிலில் சனிக்கிழமை தொடா் விடுமுறை மற்றும் காா்த்திகை திருநாளையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் வரும் நாள்களில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கூட்டம் ஏராளமாக இருப்பது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை காா்த்திகை தினம் மற்றும் தொடா் விடுமுறை காரணமாக, அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.

அதிகாலை 4 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் படிப்பாதை, விஞ்ச் நிலையங்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். திருக்கோயில் நிா்வாகம் சாா்பில், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.