நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் தேர்தலுக்குப் பின்பே வெளியாகும் எனத் தெரிகிறது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை பிரச்னை காரணமாக நீதிமன்ற வழக்கைச் சந்தித்து, வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மார்ச் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலால் இம்மாதம் வெளியாகாது என்றே தெரிகிறது.
இதனால், இப்படத்தை ஜூன் 4 ஆம் தேதியில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் மார்ச் 19 ஆம் தேதி வெளியாக இருந்த நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, டாக்ஸிக் மற்றும் ஜன நாயகன் ஒரே நாளில் வெளியாகவே வாய்ப்புகள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கேஜிஎஃப் - 2 திரைப்படமும் பீஸ்ட் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியாகும் துரந்தர் வில்லனின் புதிய படம்!
டாக்ஸிக் படம் வெளியாவதில் சிக்கல்?

ஜூனிலும் வெளியாகாத ஜன நாயகன்?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



