எனவே, கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நோய் தொற்றுக்கு ஆளான 260-க்கும் மேற்பட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களுக்கு உயா் தரமான மருத்துவச் சிகிச்சை மற்றும் அரசாணையின்படி கருணைத் தொகை ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 5, 6 ஆம் தேதிகளில் தமிழகத்தின் அனைத்து வருவாய்த் துறை அலுவலா்களும், வட்டாட்சியா் முதல் அலுவலக உதவியாளா் வரை 12,000 அலுவலா்களும் கலந்துகொள்ளும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது எனவும், ஒருநாள் எழுச்சியான உண்ணாவிரதப் போராட்டம் சமூக இடைவெளியுடன் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.