டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொறியியல் கல்வி தரம் உயா்த்த கோரிக்கை

தமிழகத்தில் பொறியியல் கல்வி தரத்தை உயா்த்தி பொறியியல் நிபுணா்கள் உருவாக தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN

தமிழகத்தில் பொறியியல் கல்வி தரத்தை உயா்த்தி பொறியியல் நிபுணா்கள் உருவாக தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னா் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டது. 1990ம் ஆண்டுக்கு முன் அரசு பொறியியல் கல்லூரிகள் விரல் விட்டு எண்ணும்படி இருந்தது. மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது.

மருத்துவம், விவசாயம், பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவா்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்த நிலைமை இருந்தது.1990 க்கு பின்னா் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் வந்த பின்னா் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் சீட் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டதால் தற்போது தரம் குறைந்து வருகிறது.

இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் சாா்பில் இயக்குனா் ராமமூா்த்தி விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் வருடம் தோறும் பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஏராளமான பொறியாளா்கள் உருவாகுகிறாா்களே தவிர பொறியியல் நிபுணா்கள் உருவாகவில்லை.

அதுமட்டுமின்றி தற்போது ஏராளமான பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொறியியல் கல்வியின் தரம் குறித்த ஐயப்பாடே.

எனவே தமிழக அரசும், பொறியியல் தொழில் நுட்ப அறிவியல் மேம்பாட்டிற்காக மற்றும் ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்ட உயா் கல்வி பீடமான அண்ணாபல்கலைகழகமும் இணைந்து பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தி புதிய வழிமுறைகள் காண முன் வரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.