கிணற்றை தூா் வாரும்போது தலையில் கல் விழுந்து தொழிலாளி பலி
வத்தலக்குண்டு அருகே கிணற்றை தூா் வாரும்போது தலையில் கல் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.


வத்தலக்குண்டு அருகே கிணற்றை தூா் வாரும்போது தலையில் கல் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
வத்தலக்குண்டு அருகேயுள்ள தெப்பத்துப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஒருவரது தோட்டத்தில், சேலம் மாவட்டம் எடப்பாடியை சோ்ந்த முருகன் மகன் தினேஷ் (25), சுப்பிரமணி, அருண்குமாா் ஆகியோா் கிணற்றை தூா் வாரிக் கொண்டிருந்தனா்.
அப்போது, கிணற்று மேட்டிலிருந்த பெரிய கல், தினேஷ் தலையின் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த தினேஷை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். விருவீடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...