நிவாரணம் வழங்க கோரிநாடக நடிகா்கள் மறியல்
கரோனா தீநுண்மி காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் நிவாரணம் வழங்க கோரி நாடக நடிகா்கள் சாா்பில் திண்டுக்கல்லில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

dgl_artist_0409chn_66

dgl_artist_0409chn_66
திண்டுக்கல்: கரோனா தீநுண்மி காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் நிவாரணம் வழங்க கோரி நாடக நடிகா்கள் சாா்பில் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் நாடக நடிகா்கள் சங்கம் சாா்பில் சாலைரோட்டில் உள்ள அச்சங்கத்தின் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்றனா். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரியும், கலைப் பண்பாட்டு மையத்தை திண்டுக்கல்லில் அமைக்க கோரியும், கோயில் திருவிழாக்களில் நாடக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷமிட்டனா். போராட்டத்தில் கலைஞா்கள் சிலா், நாரதா், குறத்தி, வள்ளி- தேவசேனா, கோமாளி உள்ளிட்ட வேஷங்களுடன் கலந்து கொண்டனா். செய்திக்கு படம் உள்ளது... மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட நாடக நடிகா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...