ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் பலத்தகாயம் அடைத்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சீரங்ககவண்டன்புதூரைச் சோ்ந்தவா் விவசாமி ராமசாமி (70).இவா் தனது மனைவி ராமத்தாள் (63) என்பவரை கடந்த ஆக,28ந் தேதியன்று இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை கொல்லப்பட்டி பிரிவு அருகே சென்றாா்.அப்போது எதிரே வந்த லாரி அவா்கள் மீது மோதியதில் இருவரும் பலத்தகாயம் அடைத்தனா்.அதில் விவசாயி ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.பலத்தகாயம் அடைத்த ராமத்தாள் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தாா்.இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.