விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் இருந்து காவல்துறை வாகனத்தில் தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின், விசாரணைக்குப் பிறகு நேற்றிரவு விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், திமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற சோஃபா மாடல் அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் அப்யூஸ் வாரியர்ஸை வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமெடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன். போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கட்சித் தொண்டர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விவà®à®¾à®¯à®¿à®à®³à®¿à®©à¯ தà¯à®¯à®°à¯ தà¯à®à¯à®à¯à® வà®à¯à®à®±à¯à®± #SofaModel à®à®°à®à¯, பிரà®à¯à®à®¿à®©à¯à®à®³à¯ திà®à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà¯à®µà®¤à®±à¯à®à®¾à® à®à®©à¯à®©à¯ à®à¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.
— Udhay (@Udhaystalin) August 4, 2026
தà®à¯à®à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¾à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ தà¯à®µà¯à®¯à®±à¯à®± வாரà¯à®¤à¯à®¤à¯à®à®³à¯ நான௠பயனà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®¿à®¯à®¤à®¾à® à®à®³à¯à®à¯à®à®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ Abusive warriors-஠வà¯à®¤à¯à®¤à¯ à®à®©à¯ à®®à¯à®¤à¯ à®à®µà®¤à¯à®±à¯ பரபà¯à®ªà®¿à®©à®¾à®°à¯à®à®³à¯.
பà¯à®¯à¯ வழà®à¯à®à¯à®à®³à¯à®ªà¯à®ªà®¤à®¿à®µà¯à®à¯â¦ pic.twitter.com/5KroOiDwp2
Summary
I would get arrested not just once, but even a hundred times for the sake of farmers! — Udhayanidhi Stalin's post.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி!

பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா? பதிலளிக்காமல் சென்ற மேயர் பிரியா!

கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்! உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK




