FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி!

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டது குறித்து...

News image

கைது செய்து அழைத்துச் செல்லப்படும் உதயநிதி ஸ்டாலின் - பிடிஐ

Updated On :4 ஆகஸ்ட் 2026, 6:33 pm IST

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தஞ்சை தெற்கு நகர காவல் நிலையத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்ததால், செங்கிப்பட்டிக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்த தகவல் அறிந்து தொண்டர்கள் பலர் செங்கிப்பட்டி காவல் நிலையம் நோக்கி வருவதாகத் தெரிகிறது. இதனால் செங்கிப்பட்டி காவல் நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திமுகவினர் யாரையும் அனுமதிக்காத வகையில் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், எ.வ. வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மட்டும் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது ஏன்? என முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்றம் கூறிய காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், உதயநிதியை காவல் துறையினர் அலைக்கழிப்பதாக திமுக வழக்குரைஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Summary

DMK Udhayanidhi stalin being taken to Sengipatti instead of Thanjavur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.