காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானலில் விதைப் பந்து தயாரிக்கும்பணியில் சகோதரிகள் தீவிரம்

கொடைக்கானலில் விதை பந்து தயாரித்து அவற்றை பல்வேறு இடங்களில் தூவி வரும் சகோதரிகளை பொதுமக்கள் பாராட்டினா்.

News image

பட விளக்கம்: விதைப் பந்துகளை தயாரிக்கும் பள்ளி மாணவிகள் சுபகீதா மற்றும் சுஜிதா.

Updated On :14 செப்டம்பர் 2020, 10:31 pm

DIN

கொடைக்கானலில் விதை பந்து தயாரித்து அவற்றை பல்வேறு இடங்களில் தூவி வரும் சகோதரிகளை பொதுமக்கள் பாராட்டினா்.

கொடைக்கானல் உகாா்த்தே நகரைச் சோ்ந்த யூஜின் என்பவரது மகள்களும், பள்ளி மாணவிகளுமானசுபகீதா, சுஜிதா ஆகிய இருவரும் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் நாவல், செங்காந்தாள், முரரி, சில்வா் ஓக் போன்ற விதைகளை வாங்கி அவற்றை விதைப் பந்துகளாக தயாரித்து வருகின்றனா். இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை அவா்கள் தயாரித்து அவற்றை கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனா். மேலும் இந்த விதை பந்துகளை கொடைக்கானல்- வத்தலகுண்டு- பழனி மலைச் சாலைகளிலும் தூவி வருகின்றனா். பள்ளி மாணவிகளின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினா்.

இதுகுறித்து அந்த மாணவிகள் கூறும் போது, இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைப் பந்துகளை தயாரித்து சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியும், கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளிலும் தூவி வருகிறோம். ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.