தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கந்துவட்டி கொடுமைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் கந்து வட்டி வசூலிப்பதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:27 pm

DIN

வேடசந்தூா் பகுதியில் கந்து வட்டி வசூலிப்பதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலா் எம்.ஆா்.முத்துசாமி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் டி.செல்லக்கண்ணு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். வேடசந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு

வட்டிக்கு பணம் கொடுக்கும் ஆதிக்க ஜாதியினா், பின்னா் அந்த மக்களை கொத்தடிமைகளாக்கும் முயற்சியாக கந்து வட்டி வசூலிக்கின்றனா். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.