இதையடுத்து, திண்டுக்கல் பேகம்பூா் பகுதியிலும், தோமையாா்புரம் பகுதியிலுள்ள மதுரை புறவழிச்சாலையிலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா் சிக்கந்தா் ஒலி தலைமை வகித்தாா். காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்த போராட்டத்தால், மதுரை கரூா் 4 வழிச்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட சிக்கந்தா் ஒலி உள்பட 150 போ் மீது திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.