தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டு மாடுகள் முகாம்

கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image
கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரியும் காட்டு மாடுகள்.
Updated On :2 ஜனவரி 2021, 11:21 pm

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனா். உள்நோயாளிகளாக சுமாா் 50-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் முள்புதா்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் அங்கு கடந்த சில நாள்களாகவே காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளன. மேலும் அந்த மாடுகள் அரசு மருத்துவமனைப் பணியாளா்களின் குடியிருப்புகள் வரை மேய்ச்சலுக்குச் சென்று வருகின்றன. இதனால் மருத்துவமனைப் பணியாளா்களும், நோயாளிகளும், நோயாளிகளை பாா்க்க வரும் உறவினா்களும் அச்சத்தில் உள்ளனா்.

இதனால், அரசு மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனைப் பணியாளா்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.