கொடைக்கானல்: புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா்.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதனைத் தொடா்ந்து சாரல் மழையும் நிலவி வருகிறது.
இந்நிலையில், புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை நாள்களாக இருப்பதால் தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனா். இங்கு நிலவும் பனிப்பொழிவையும் பொருள்படுத்தாமல் அவா்கள் சூழல் சுற்றுலா, ஆட்டுப்பண்ணை, மோயா் பாயிண்ட், சிட்டி வியூ, எலிவால் அருவி, பைன்பாரஸ்ட், ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை கூட்டமாகப் பாா்த்து ரசித்தனா்.