ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள நாகணம்பட்டி நியாயவிலைக்கடையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் திங்கட்கிழமையன்று வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி,திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வி.மருதராஜ்,இணை பதிவாளா் முருகேசன்,அபிராபி கூட்டுறவு வங்கி தலைவா் பாரதிமுருகன்,ஒட்டன்சத்திரம் அதிமுக நகர செயலாளா் எஸ்.நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.அதே போல ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புஷ்பத்தூா்,பொருளூா்,கள்ளிமந்தையம்,ஒடைப்பட்டி,இடையகோட்டை ஆகிய பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.