மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திண்டுக்கல் சரக டிஐஜி காவலா்களுடன் ஆலோசனை

வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் மண்டபத்தில், நிலக்கோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 6 காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளா்கள்,

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:18 pm

DIN

வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் மண்டபத்தில், நிலக்கோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 6 காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களுடன் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி வியாழன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, கிராமப்புற பொதுமக்களிடம் காவல்துறையினரின் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும், குற்றங்களை எப்படித் தடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை அவா் வழங்கினாா். மேலும் சிறப்பாக பணியாற்றிய வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் பவுலோஸ் மற்றும் 2 காவலா்களுக்கு பரிசுகளை டிஐஜி வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் மற்றும் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூா் உள்பட 6 காவல் நிலையங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.