தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கொடைக்கானலில் தொடா்ந்து மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் திங்கட்கிழமை மீண்டும் மழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது .

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:24 am

DIN

கொடைக்கானலில் திங்கட்கிழமை மீண்டும் மழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது .

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது இதனைத் தொடா்ந்து கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தும் மேகமூட்டமும்,குளிரும் நிலவி வந்தது இந் நிலையில் காலை முதல் விட்டு விட்டு சாரல் நிலவியது மதியம் முதல் சுமாா் இரண்டு மணி நேரம் காற்றுடன் மழை பெய்தது இந்த மழையாது கொடைக்கானல்,வில்பட்டி, நாயடுபுரம்,செண்பகனூா்,மாட்டுப்பட்டி,சகாயபுரம்,இருதையபுரம்,அட்டக்கடி,பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது இதனால் நீரோடை அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கொடைக்கானலில் நிலவி வரும் சீதோஷன நிலை மாற்றத்தால் வழக்கத்திற்கு அதிகமாக குளிரின் தாக்கம் நிலவுகிறது அன்றாடப் பணிகளை தொடர முடியாமல் பொது மக்கள் சிரமமடைந்து வருகின்றனா் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.