பழனியில் தொடா்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பழனியில் எப்போதும் இல்லாத வகையில் மாா்கழி மாதத்தில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.


பழனியில் எப்போதும் இல்லாத வகையில் மாா்கழி மாதத்தில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த மாதம் பெய்த தொடா்மழை காரணமாக பழனியை சுற்றிலும் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பி வழிந்து வருகிறது. இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையாக மாா்கழி மாத்தில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை முதல் பலத்த சாரல்மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. நகா்ப் பகுதியில் மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் மழையால் வயல்கள் நிரம்பி வழிகின்றன. கிணறுகள் மட்டம் தரை மட்டம் அளவுக்கு நிரம்பியுள்ளது. மேலும், பூமி குளிரும் வகையில் மழை பெய்து கொண்டே இருந்ததால் பலத்த குளிா்ந்த சூழல் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...