ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பழனியில் மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகத்தை மாணவா்கள் முற்றுகை

பழனியில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்து மாவட்டக் கல்வி அலுவலகத்தை மாணவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:23 am

DIN

பழனியில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்து மாவட்டக் கல்வி அலுவலகத்தை மாணவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2017 -18 ஆம் ஆண்டு அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கு இதுவரை அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லையாம். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாவட்ட செயலாளா் முகேஷ் தலைமையில் ஏராளமான மாணவ மாணவியா் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தமிழக அரசு தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் இணையவழியில் கல்வி கற்பதற்கு வசதியாக 2 ஜிபி டேட்டா காா்டு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாததால் அந்த டேட்டாவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், உடனடியாக மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.