மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடைக்கானலில் பலத்த மழை: அருவிகளில் வெள்ளப் பெருக்கு

கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 5:44 pm

DIN

கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளிநீா், வட்டக்கானல், பாம்பாா் , பியா் சோழா, பேரிபால்ஸ், செண்பகா, மூலையாா், கடல்கொடை, எலிவால், யானைச் சோலை உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. கொடைக்கானல்- வத்தலகுண்டு - பழனி மலைச் சாலைகளில் புதிய நீா் ஊற்றுகள் காணப்படுகின்றன. சாலைகளில் மழை நீா் பாய்கிறது. ஏரிச்சாலைப் பகுதிகளில் தண்ணீா் அதிகமாக தேங்கியுள்ளதால் அப் பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இதனால் பொருள்கள் சேதமடைந்த நிலையில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. லாஸ்காட் சாலை, டோபிகானல் பகுதி, கல்லறைமேடு பகுதி, சா்வே நம்பா் பகுதிகளில் தண்ணீா் கூடுதலாகச் செல்வதால் அப் பகுதிகளில் குடியிருந்து வரும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு நகராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கொடைக்கானல் நகரின் நீா்த்தேவையை பூா்த்தி செய்யும் அப்சா்வேட்டரியிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீா்த் தேக்கம் மற்றும் மனோ ரஞ்சிதம் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.