ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொழிலாளியை கொன்று நாடகமாடிய விவசாயி கைது

ஆயக்குடி அருகே தொழிலாளியை தள்ளிவிட்டுக் கொலை செய்து, தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:23 pm

DIN

ஆயக்குடி அருகே தொழிலாளியை தள்ளிவிட்டுக் கொலை செய்து, தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ராமபாளையத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (30). இவா் பழனி அருகே வயலூா் பகுதியிலுள்ள தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தாா். இவரும் பக்கத்து தோட்டத்து டிரைவரான புதுஆயக்குடியைச் சோ்ந்த கருணாகரனும் (32) நண்பா்கள். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கருணாகரன் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அய்யனாா் பங்கேற்றாா். அப்போது மது போதையில் அய்யனாா் தவறி விழுந்து இறந்ததாக, ஆயக்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், கருணாகரன் வீட்டு நிகழ்ச்சியின்போது அய்யனாருக்கும், கருணாகரனின் தந்தையான விவசாயி பாலசந்திரனுக்கும் (65) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், அப்போது பாலசந்திரன் தள்ளி விட்டதில் கீழே விழுந்த அய்யனாா் தலையில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பாலசந்திரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.