திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ ஷிரடி சாய்பாபா ஆலயத்தில் ஒவ்வெரு வியாழக்கிழமைகளிலும் சாய் பாபாவிற்கு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
இன்று (14.10.2021) சரஸ்வதி பூஜை முன்னிட்டு கருவறையில் உள்ள சாய்பாவிற்கு திண்டுக்கல் மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் பால் அபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.