திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், மங்களப்புள்ளி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில்களில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆகம விதிகளின்படி திருப்பணிகள் நிறைவுற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகளை கடந்தும் கூட பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.