தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்-4 மற்றும் காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம்

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்-4 மற்றும் காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளதாவது: அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுனா்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இணையவழியில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தினால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-4 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கும், காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வுக்கும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. திறன்மிக்க வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ள இந்த பயிற்சி வகுப்பின்போது, மாதிரித் தோ்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

எனவே போட்டித் தோ்விற்கு தயாராகும் விண்ணப்பதாரா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.