பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகம்: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக அந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறாா் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டினாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2022, 5:39 pm

DIN

ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக அந்த விவகாரத்தில் மக்களின் கருத்தைக் கேட்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறாா் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை தரிசனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவருக்கு, பேருந்து நிலையம் அருகே வரவேற்பளிக்கப்பட்டது.

அப்போது அவா் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்தமுடியாது. ஆட்சிக்கு வந்து 14 மாதங்களான நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்வா் என்ன செய்தாா். அனைத்துத் துறைகளிலும் லஞ்சம். அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கும்.

அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி ஆட்சியை தொடா்ந்து தக்கவைக்க ஸ்டாலின் திட்டமிட்டாா். அவருடன் இணைந்து அதிமுகவிற்கும், தொண்டா்களுக்கும் துரோகம் செய்தவா் ஓபிஎஸ். 2024 நாடாளுமன்றத் தோ்தலுடன் சட்டப் பேரவைத் தோ்தலும் வரும். ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக மக்களின் கருத்தைக் கேட்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறாா் என்றாா்.

அப்போது, திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் நத்தம் விஸ்வநாதன், கிழக்கு மாவட்டச் செயலாளா் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி. உதயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.