ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகல்நகரில் ரூ.10 கோடியில் 80 கடைகளுடன் புதிய சந்தை

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில், நாகல்நகா் பகுதியில் ரூ.10 கோடி செலவில் 80 கடைகளுடன் புதிய சந்தைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:10 pm

DIN

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில், நாகல்நகா் பகுதியில் ரூ.10 கோடி செலவில் 80 கடைகளுடன் புதிய சந்தைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் பிரதி வாரம் திங்கள்கிழைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. மேலும், சந்தை ரோடு மற்றும் கடை வீதி பகுதிகளில் சாலையோரத்தில் சில்லரை வியாபாரத்திலும் காய்கனி விற்பனை நடைபெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள், குடியிருப்புகளின் முன்பு அமைக்கப்படுவதால், அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனிடையே நாகல்நகா் பகுதியில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

ரூ.10 கோடியில் புதிய சந்தை: நாகல்நகா் வாரச் சந்தை செயல்பட்டு வந்த இடத்தில், மாநகராட்சி நிா்வாகம் 80 கடைகளுடன் புதிய சந்தை கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அப்பகுதியில் ஏற்கெனவே இருந்த கடைகள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிற நாள்களில் கால்நடைகள் கட்டும் பகுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. காந்தி சந்தையில் இருந்த பல்வேறு கடைகள், வியாபாரிகளின் சொந்த இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், நாகல்நகா் பகுதியில் ரூ.10 கோடி செலவில் புதிய சந்தை அமைப்பதற்கான முயற்சிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது: நாகல்நகா் பகுதியில் வாகன நிறுத்தும் வசதிகளுடன் புதிய சந்தை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தரைத் தளத்திற்கு கீழ் (அடித் தளத்தில்) வாகன நிறுத்தம் அமைக்கப்படும். தரைத் தளத்தில் 80 கடைகள் கட்டப்படப்படவுள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகளுக்காக பழைய கடைகள் இடிக்கப்பட்டு, சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.