தாடிக்கொம்பு கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி தாடிக்கொம்பு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தேய்பிறை அஷ்டமியையொட்டி தாடிக்கொம்பு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து சுவாமிக்கு ராஜஅலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இச்சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல், திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள காலபைரவா் சந்நிதியிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com