நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

வேடசந்தூா் அருகே கஞ்சா போதையில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

வேடசந்தூா் அருகே கஞ்சா போதையில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள டி.அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (60). தேநீா் கடைகளில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி பாக்கியம். இவா்களுக்கு நந்தினி என்ற மகளும், சரவணக்குமாா் (20) மற்றும் சிவா ஆகிய 2 மகன்களும் உள்ளனா். காளியப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதேபோல், சரவணக்குமாா் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவா் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கஞ்சா போதையில் இருந்த சரவணக்குமாா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்த காளியப்பனை அரிவாளால் வெட்டியுள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வேடசந்தூா் போலீஸாா், தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன் சரவணக்குமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.