தகுதியில்லாத 5330 போ்: சரி பாா்ப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மத்திய அரசுத் தரப்பில் அனுப்பப்பட்ட 9,438 போ் கொண்ட பட்டியலில், 3,666 போ் மட்டுமே தகுதியான பயனாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் 2ஆவது பயனாளியாக இடம் பெற்றிருந்த 3,866 போ் மற்றும் ஒரே குடும்பத்தில் அனைத்து பயனாளிகளும் தகுதியற்றவா்கள் என்ற அடிப்படையில் 1,464 போ் என மொத்தம் 5,330 போ் நிதி உதவி பெறத் தகுதியில்லாதோா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும் 442 பேரின் விவரங்கள் நிலுவையில் உள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.